அன்பார்ந்த புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் உறவுகளே!

T,M.V.P
எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 08ம் திகதி இடம்பெற உள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாம் தனித்து களமிறங்கியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் பல பாகங்களிலும் எமது கட்சி இத்தேர்தலின் ஊடாக தன்னை விரிவு படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய கால இடைவெளிக்குள்ளேயே மக்களின் இயல்பு வாழ்வையும் ஜனநாயகச் சூழலையும் மீளக்கட்டியமைப்பதில் நாம் வகித்த பங்கு அளப்பரியது என்பது உலகு அறிந்த உண்மையாகும். இதற்கு எமது கட்சியும் கட்சி உறுப்பினர்களும் தலைமைப்பீடமும் கொண்டிருந்த ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியும் அர்ப்பணிப்புகளுமே அடிப்படைக் காரணங்களாகும் Read the rest of this entry →

10

03 2010

அதி அற்புதமான தந்திரங்களால் நேர்ந்திருக்கிற வேதனைகளையும் அழிவையும் பற்றி…சதா. ஜீ.

Sam Sures
யானை இருந்தாலும் ஆயிரம் செத்தாலும் ஆயிரம். ஆனால் தற்போதைய புலிகள் இருந்தாலும் ஒன்றுதான், செத்தாலும் ஒன்றுதான்! நல்லவன் வாழ்வான் என்பதல்ல வாழ்பனே நல்லவன்! வாய்மை வெல்லும் அல்ல, வெல்லுவதே வாய்மை! மென்மேலும் தன்னலத்தில், தனிநிறைவில் கூடிச்செல்வதும், மிகுந்து செல்வதும் அலட்டிக்கொள்ளாமலே அனைத்தையும் தனக்குச் சாதகம் ஆக்குதலுமே பெரும்பாலான அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. செலவிடாமல் சேமித்தும், அதிகரித்தும் செல்வதே அவர்களின் பெருவாழ்வு. மகா திறமை! Read the rest of this entry →

10

03 2010

வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை கட்டளைத் தளபதியிடம் பதிவு செய்ய வேண்டுகோள்

Nandikadal4Nandikadal2Nandikadal1
இயல்பு வாழ்வு ஏற்படுத்த அரசுடன் இணைந்த செயற்பாடு

வன்னியில் தனியான பல்கலைக்கழகம்

மீள்குடியேறுவோருக்கு 3 1/2 இலட்சம் வீட்டுத் திட்டம்

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார் Read the rest of this entry →

10

03 2010

வாக்குகளுக்காக எதிர்காலத்தை பாதிக்கும் தீர்மானங்களை நாம் மேற்கொண்டதில்லை ஜனாதிபதி

M.R 3
வாக்குகளைச் சிந்தித்து நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தீர்மானங்களைத் தாம் மேற்கொண்டதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.எனினும் நாட்டின் எதிர்கால பரம்பரையின் நலன்கள் பற்றிச் சிந்தித்தே அபிவிருத்திக்கான சகல தீர்மானங்களையும் மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். Read the rest of this entry →

10

03 2010

கடந்த இரண்டு மாத காலத்தில் வட பகுதிக்கு 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

Jaffna 07.02Jaffna Sathosa
நாட்டில் தற்போது சிறந்ததொரு சூழல் காணப்படுவதினால் வடக்கில் சுற்றுலாத்துறையினரின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இந்த வகையில் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் சுற்றுலாத்துறையினரின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry →

10

03 2010

கூடுதல் விலையில் அரிசி விற்பனை நாடு முழுவதும் இன்று முதல் திடீர் முற்றுகை நடவடிக்கை

Rice BagsRice Paddy
கூடுதல் விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் வகையில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக வர்த்தக விவகார நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் Read the rest of this entry →

10

03 2010

இன, மத, பிரதேச வாதம் பேசுவோருக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா

Athauilla
தலைசிறந்த அரசியல்வாதிகள் பலரைப் பிரதிநிதித்துவப்படுத்திய கல்முனை தேர்தல் தொகுதி இன்று சுயதேடல் காரர்களின் புகலிடமாக மாறி வருவதையிட்டு நாம் மிகக் கவலை அடைந்துள்ளோம். இன, மத, மற்றும் பிரதேச வாதங்களைக் கூறிக்கொண்டு அரசியல் நடத்த நினைப்பவர்களுக்குப் பொதுத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான ஏ. எல். எம். அதாவுல்லா கூறினார் Read the rest of this entry →

10

03 2010

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் சிவில் நடவடிக்கைகளுக்கான அலுவலகம் திறப்பு

Jaffna_civil_1Jaffna_civil_2
யாழ்ப்பாண மக்களுக்கும் பாதுகாப்புப் படைப்பிரிவான இராணுவத்தினருக்குமிடையிலான உறவினை வலுப்படுத்துவதுடன் சிவில் நிர்வாக நடவடிக்கைகளையும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்வதற்கான முதலாவது அலுவலகம் இன்று யாழ் வைத்தியசாலை வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது Read the rest of this entry →

09

03 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை ! எஸ்.எம்.எம். பஷீர்

namal_mahindaRangan
பசுத்தோல் போர்த்த புலியான ரங்கன் மலையகத்தில் அரசியல் செய்வதற்கு முனைந்துள்ளார் இவர்களுக்கு பொருத்தமான தொழில் விபச்சாரமே என மலையக மக்களில் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர் –ஆசிரியர் மஹாவலி.கொம்
நாங்கள் பத்திரிகையாளர்கள் என்ற வகையில் தோல்விகளை பகுப்பாய்வு செய்வதில் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்; ஆனால் வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதில் அதிகம் சிறந்தவர்களாக இல்லை ” .
( “We are very good as journalist at analyzing failures; but we are not so good at analyzing success”- Martyn Lewis )
மார்ட்டின் லூயிஸ் முன்னாள் பீ.பீ.சீ செய்தி வாசிப்பாளர் Read the rest of this entry →

09

03 2010

கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சும் கிழக்குமாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது

Helth Ministri
கிழக்கு மாகாணத்தின் சுகாதாரமும்,சுதேச மருத்துவமும், சமூக நலனோம்புகை, நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவைகள், மகளிர் அலுவல்கள், இளைஞர் அலுவல்கள், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பக்கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகமும் தொடர்பான அமைச்சினை கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காலை 08.45 மணியளவில் கிழக்குமாகாண ஆளுனர் ரியர் அத்மிரல் மொகான் விஜேவிக்கிரம முன்னிலையில் பொறுப்பேற்றார். மேற்படி நிகழ்வானது திருமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இடம் பெற்றது. சுகாதார அமைச்சை ஏற்கனவே எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

09

03 2010

இந்திய வெளியுறவுச்செயலரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு.

C.MC.M and Nirupamarav 1C.M and Nirupamarav 2
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகைதந்திருக்கும் இந்திய வெளிஉறவுச் செயலர் திருமதி நிருபமராவ் அவர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்குமிடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று இன்று(08.03.2010.) கொழும்பு தாச் சமுத்திரா கோட்டலில் இடம்பெற்றது Read the rest of this entry →

09

03 2010

ஏ.9 பாதை வடக்குத் தெற்கின் வர்த்தகப் பாலம்

A-9 in Kilinochchi 16.06.09
தென்பகுதி உற்பத்திப் பொருட்களின் விலைகள் யாழ்குடாநாட்டில் நியாய விலையில் கிடைப்பதற்கும் யாழ்குடாநாட்டு உற்பத்திப் பொருட்கள் தென்பகுதியில் தாராளமாகக் கிடைப்பதற்கும் தற்போது வழியேற்பட்டுள்ளது.தென்பகுதியில் இருந்து ஏ-9 பாதை ஊடாக யாழ்குடா நாட்டுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கருதி இடைவழியில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணம் இப்போது நீக்கப்பட்டுள்ளது Read the rest of this entry →

09

03 2010

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும் —அமைச்சர் பாடலி

Ranawaka,
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2/3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். Read the rest of this entry →

09

03 2010

ஒருவரின் செயலுக்குரிய பரிசு எது? சுகி சிவம்

Suki Sivam
மலைக்கு மேல் இருக்கும் தனது வீட்டுக்கு அடிவாரத்தில் இருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் சுமந்து செல்வான் அந்தக் குடியானவன். ஒரு பானையில் மட்டும் சில ஓட்டைகள் இருந்தன. இதனால் வழிநெடுக நீர் ஒழுகி வீட்டை அடைவதற்குமுன் பாதியளவு நீர் குறைந்து விடும். முதலாளிக்கு நன்றாகப் பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் கண்மூடிக் கிடந்தது அந்தப் பானை Read the rest of this entry →

09

03 2010

2015ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வறுமை நிலை முற்றாக ஒழிக்கப்படும் அமைச்சர் ராஜித சேனரத்ன

Rajitha Harischandra SenaratneNew Sri Lanka
2015 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் இருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்படும். தற்பொழுது இரண்டாவது உலக நாடாக வளர்ந்து வரும் இலங்கை மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்வரும் 6 வருட ஆட்சிக் காலத்தில் முதலாம் உலக நாடாக வளர்ச்சியடையும். தலைசிறந்த நாட்டுத் தலைவரும் பலமான அரசாங்கமும் உள்ள நாடுகளே துரிதமாக அபிவிருத்தி கண்டுள்ளன. எமக்கு தலைசிறந்த தலைவர் கிடைத்துள்ளதோடு பலமான அரசாங்கமொன்றை அமைக்கவே மக்கள் ஆணையை கோருவதாக நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார் Read the rest of this entry →

09

03 2010