எதிர்க்கட்சிகளுக்கு பதிலாக எதிர்க்கும் கட்சிகள் மட்டுமுள்ள இலங்கைப் பாராளுமன்றத்தில். மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் மக்களின் அங்கீகாரமும்

jUNP and -JVPU.N.P
மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய பின் மீள்குடியேற்றம் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 267.393 என்றும் இவர்களுள் 35.333 பேர் மாத்திரமே இன்னும் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என்றும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல தெரிவித்தார் Read the rest of this entry →

30

07 2010

விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சிகளாகலாமா?

Lampe
சேமிப்புக் குணம், சிக்கனம் ஆகியவை பற்றி நிறையப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் அவ்வப்போது இந்த உணர்வைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. காரணம் செலவழிப்பதிலும் ஆடம்பர வசதிகளிலும் நம்மனம் அடிக்கடி ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.கைத்தொலைபேசி இல்லாதவர்களைக் கண்டு செல்போன் இருப்பவர்கள் திருப்தி அடைவது இல்லை. லேட்டஸ்ட் மாடல் தேவை என்றோ, அவரைப்போல் இன்னொன்று வாங்கி வைத்துக் கொணடால் அதில் மேலும் பல செளகரியங்கள் இருக்கின்றன என்றோ எண்ணிக்கொண்டு நிறைவற்ற மனதுடன் வலம் வருகிறார்கள். ஏக்க உணர்வுடன் காலத்தை ஓட்டுகிறார்கள் Read the rest of this entry →

30

07 2010

கல்லிலே கண்ட கலைவண்ணம் –சாரதா மனோகரன்

Thanchai_big_temple
உலகிலே கோவில் கட்டும் துறையில் தமிழினம் தான் உயர்ந்து விளங்கியது. இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட கோவில்களிலே தஞ்சை பெருங்கோவில் தான் மிகப் பெரியது’ என பிரித்தானிக்கா தகவல் களஞ்சியம் குறிப்பிடுகிறது. ஆட்சி நிலை, ஆடம்பரமான மாட மாளிகைகள், கோட்டைகள் என எங்கும் பிரமாண்டத்தை உருவாக்கிய மன்னர்கள் கோவில்களிலும் பிரமாண்டத்தை விட்டுவைக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நின்று நிலைத்து காலத்தால் அழிக்கப்படாத வரலாற்றைப் பறைசாற்றும் தென்னிந்தியக் கோவில்களின் பிரமாண்டம் அவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும். வட இந்தியாவின் சிறப்பு பிரமாண்டமான கலை நயம் மிக்க கோட்டைகளும் அரண்மனைகளுமென்றால் தென் இந்தியாவின் சிறப்பு இந்தத் திருக்கோவில்களேயாகும் Read the rest of this entry →

30

07 2010

உடல் ரீதியான தண்டனை தவிர்ந்த மாற்றுவழி தெரிந்திருக்காத ஆசிரியர் திறமை குன்றியவர் —மெளலவி ணி. ஹில்மி

Teaching 2
இன்றைய நவீன உலகில் மனித நேயம் இன்றியமையாத மிகவும் அவசிய அவசரத் தேவையாகும். உலகமயமாக்கல் மூலம் மனித சமூகம் துரிதமாக மாறிவருகிறது. இதனால் இளய சமூகங்கள் சாதக விளைவைப் பெற்று முன்னேறித் திகழ்கின்றன. என்று புகழும் அதேசமயம், பாதக விளைவுகளால் சிக்குண்டு விப்பதைக்கண்டு அவர்களது எதிர்கால வாழ்வு குறித்து ஏங்கித்தவிக்கும் பெற்றோர்களை நிறையவே காணக்கூடியதாக உள்ளது Read the rest of this entry →

29

07 2010

தெரியுமா? அறிந்துகொள்வதற்காக

sunsetAtlantic
அட்லாண்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

கைரேகையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் Read the rest of this entry →

29

07 2010

தமிழ்க் கட்சிகள் அரங்கம்’ 9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு: புலிக்கூட்டமைப்பை அழைக்க முடிவு

Sampanthan and PrabakaranTamilparties
இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டு (1931) வருடங்கள் 79 ஆன நிலையில் சி சுந்தரலிங்கம், ஜி.ஜி பொன்னம்பலம், எஸ்.ஜே.வி செல்வநாயகம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முருகேசு சிவசிதம்பரம், வேலுப்பிள்ளை பிரபாகரன், போன்ற வீராதிவீரர்களால் ஒரு அங்குலம்கூட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னகர்த்தமுடியாது போன நிலையில் இரா சம்பந்தன் நாட்டின் அதி உயர் பதவியான ஜனாதிபதிப் பதவிக்கு முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை அமர்த்துவதற்காக அரும்பாடுபட்டு மூக்குடைபட்டு ஒரு வருடகாலம் முடிவுறாத தருவாயில் இன்று மீண்டும் ஆண்டிகள் கூடி மடம் கட்டும் பணியில் இறங்கியிருப்பது வேடிக்கையான விடயமே! Read the rest of this entry →

29

07 2010

வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்ரீ முன்னேஸ்வரம்— கே.பி.பி. புஷ்பராஜா

munneswaram 1Munnesvaram
இலங்கையின் சரித்திரப் பின்னணியோடு இணைந்து மங்காப்புகழ் பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் ஆடிமாத உற்சவம் இன்று 28ம் திகதி கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகிறது. இந்நாட்டுக்கு விஜயன் வருகை தருவதற்கு முன்பே ஐந்து பெரும் சிவஸ்தலங்கள் இருந்ததாக வரலாற்று நெறியாளரான சேர் போல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மகா தீர்த்தத்தில் திருக்கேதீஸ்வரமும், சாலவத்தை (சிலாபம்) யில் முன்னேஸ்வரமும், கோட்டையாற்றில் திருக்கோணேஸ்வரமும், கீரிமலையில் நகுலேஸ்வரமும், இருந்ததாக தெரிவிக்கும் வரலாற்று நெறியாளர் ஐந்தாவது சிவஸ்தலம் பற்றி தெரிவிக்காது உள்ளார் Read the rest of this entry →

28

07 2010

தாந்தா முருகன் ஆலயத்தின் அன்னதான நிகழ்வினை முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

Thantha MuruganT Murugan
கிழக்கிலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற தாந்தா முருகன் ஆலயத்தின் உற்சவம் தற்போது நடை பெற்று வருகின்றது. இன்று இவ் ஆலயத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அன்னதான நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு, ஆலயத்தின் தீர்த்தக் கேணி புணர்நிர்மாணம் தொடர்பாகவும் ஆலயப் பரிபாலன சபையோடு கலந்துரையாடினார். அது மாத்திரமன்றி குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. எதிர்வருகின்ற உற்சவ காலங்களில் முற்று முழுதாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார் Read the rest of this entry →

28

07 2010

அரசியலமைப்புத் திருத்தம் ஐ.தே.கவுக்கு சோதனைக் களம்

U.N.P Logo
ஒரு நாட்டின் அரசியலமைப்பு அந்த நாட்டின் உயிர் நாடி எனக் கூறலாம். நாட்டின் நிர்வாகம் முதல் நீதித்துறை வரை அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அரசியலமைப்பே அடிப்படையாக அமைகின்றது. எனவே தான் அரசியலமைப்பைத் தயாரிப்பதில் சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் எனக் கூறுவர். முதலாவது குடியரசு அரசியலமைப்பு அவ்விதமாகவே தயாரிக்கப்பட்டது. அரசியலமைப்பு நிர்ணய சபையில் சகல சரத்துகளும் விவாதிக்கப்பட்டதோடு விவாதங்கள் பகிரங்கமாகவும் இடம் பெற்றன Read the rest of this entry →

28

07 2010

மனதை வைத்து தீர்மானிக்கப்படும் வாழ்க்கை

Life is Beautiful
மனம் உடைந்து விடக் கூடாதென்று பார்க்கிறேன்!’ இப்படிச் சொல்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இது உண்மைதான். கண்ணாடி உடைந்த பிறகு கண்ணாடியின் தன்மையில் அது இருப்பதில்லையே. கசக்கிப் போட்ட பூ மறுபடி எப்படிப் புதிய பூவாக முடியும்? யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களல்ல. அந்தஸ்து பட்டம் படிப்பு, அழகு எல்லாமே மனதுக்குக் கீழே இருக்க வேண்டியவை. அவை மனதுக்குள் கர்வத்தைப் போர்த்தி விடக் கூடாது. சிலரின் வெளித் தோற்றத்தில் இருக்கும் நேர்த்தியும் அழகும் மனதுக்குள் இருப்பதில்லை. சிலரின் வெளித்தோற்றத்தில் இருக்கும் அசிங்கமும் கர்வமும் மனதுக்குள் இருப்பதில்லை. மனிதர்கள் புரியாத புதிராகவே இருக்கிறார்கள். Read the rest of this entry →

28

07 2010

இரத்த தானம் செய்யப் போகிறீர்களா?

donate blood
நமக்கு இருப்பதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்தப் பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான். ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்குப் பார்வை கொடுப்பது கண்தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையே கொடுக்கலாம். ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம் இரத்தத்தைக் கொடுத்தால் போதும் Read the rest of this entry →

28

07 2010

இடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

Hegaliya
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் மீளக்குடியமர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.மக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்று வர முடியுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் Read the rest of this entry →

28

07 2010

நேட்டோ படையினரின் தாக்குதலில் பெண்கள், சிறுவர் உட்பட 45 பேர் பலி

Neto 30Afkan
ஆப்கானிஸ்தானில் நேட்டோப்படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 45 பொது மக்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர். ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இப்பாரிய அனர்த்தம் நடந்தது. நேட்டோப் படைகளின் தாக்குதலில் பொது மக்கள் பலியாகின்றமை ஆப்கான் அரசைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது Read the rest of this entry →

28

07 2010

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம்

H.R and Ranil
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலேயே அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாட்டின் இறைமை, பாதுகாப்பு, மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இம்மாற்றம் ஏற்படுத் தப்படுமென தெரிவித்த ஜனாதிபதி எவரதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கேற்ப இம்மாற்றம் அமையாது எனவும் தெரிவித்தார் Read the rest of this entry →

27

07 2010

வாழ்க்கை சறுக்கி விழுவதற்கல்ல

கடுமையான மன அழுத்தம் காரணமாகவே மன உளைச்சல் உண்டாகிறது. உயிருக் குயிராக நேசித்தவர்கள் திடீரென பிரியும் போது தான் மனம் அதிக மாக பாதிப்படைகிறது. இதன் பக்க விளைவாக உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது. காதல் தோல்விஇ தேர்வில் தோல்விஇ பொருளிழப்புஇ வேலை இழப்புஇ பதவி இழப்புஇ கட்டாய ஓய்வுஇ எதிர்பார்ப்புக்கு மாறான நீதிமன்ற தீர்ப்புஇ எதிர் பாராமல் நேரும் விபத்துக்கள்இ வியாபாரத்தில் நட்டம்இ அறுவை சிகிச்சைகள் போன்ற நிகழ்வுகள் எல்லாம் மன உடளைச்சலை உண்டாக்குபவை Read the rest of this entry →

27

07 2010