சர்வதேசத்தில் 2/3 பெரும்பான்மை நாடுகள் இலங்கைக்கு சாதக நிலைப்பாடு

U.N.O GenivaU.N.O.Logo
சர்வதேசத்தில் உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மொத்த நாடுகளின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான நாடுகள் இலங்கைக்குச் சாதகமாகவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார் Read the rest of this entry →

13

03 2010

பயங்கரவாதம் ஏற்பட்டதற்கான மூலகாரணத்தை கண்டறிய குழு

prabhakaran_death_photos__7_
நாட்டில் பயங்கரவாதம் ஏற்பட்டதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கவுள்ளது.பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் இந்தக் குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் கூறினார். Read the rest of this entry →

13

03 2010

மிஹின்’ லங்கா சேவை இலாபத்தில் மேலுமொரு விமானத்தை கொள்வனவு செய்யத் திட்டம்

Mihin02Mihin-Lanka
மிஹின் லங்கா விமான சேவை கடந்த மூன்று மாதங்களுக்குள் அதிகூடிய இலாபம் கண்டிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்தார்.கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களில் 300 சதவீத இலாபம் அடைந்ததன் மூலம் தமது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளோமெனவும் அவர் கூறினார் Read the rest of this entry →

13

03 2010

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பலம்மிக்க பாராளுமன்றம் அவசியம் உழைக்கும் வர்க்கத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள்

Mahintha Chinthanai
மஹிந்த சிந்தனை: இந்நாட்டு மக்கள் இழந்ததை மீளப் பெற்றுக் கொடுக்கும் கொள்கைத் திட்டம் எந்தவித சக்திகளிலும் தங்கியிராத பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்றமொன்றை அமைப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். Read the rest of this entry →

13

03 2010

பொன்சேகாவுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இரு இராணுவ நீதிமன்றங்கள் மேஜர் ஜெனரல் எச்.எல்.வீரதுங்க தலைமையில் மூவர் கொண்ட குழுமம் நியமனம்

Sarath Ponsega
கடற்படை தலைமையகத்தில் விசாரணை

16ம் 17ம் திகதிகளில் முதல் அமர்வுகள்

முன்னாள் இராணுவ தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவென மூவர் கொண்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு இராணுவ நீதிமன்றங்களை நியமித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் Read the rest of this entry →

12

03 2010

ஐ.ம.சு.மு அரசின் அமைச்சரவையில் பாரிய மாற்றம்: எண்ணிக்கையும் குறையும் எதிர்க்கட்சியினர் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்

Betel 1
தேர்தலின் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்படும் ஐ.ம.சு. முன்னணி அரசின் கீழ் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுவதுடன் அமைச்சுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 80 அமைச்சுக்களாக இருக்கும் அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 35 அமைச்சுக்களாகக் குறைக்கப்படும் Read the rest of this entry →

12

03 2010

சிறுபான்மையினர் பிரச்சினையை தீர்க்கக் கூடியவர் ஜனாதிபதியே – ஸ்ரீ.ல.மு காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

Rauff
சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒருவர் இருப்பாரேயானால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகத்தான் இருக்க முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை சிங்களவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளார். எனவே அவரால் மட்டுமே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவிடம் கூறியுள்ளார். Read the rest of this entry →

12

03 2010

புத்தளத்தைச் சேர்ந்த ஜன்சிலாவுக்கு அமெரிக்காவின் சர்வதேச பெண்களுக்கான உயர் விருது நேற்று அமெரிக்க ராஜாங்க செயலாளரான ஹிலாரி கிளின்ரனால் வழங்கப்பட்டது.

Jansila MajeedJansila Majeed.1
அரச சார்பற்ற துறையில் சேவை புரியும் பெண் ஒருவருக்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது. சர்வதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 போ் கொண்ட பட்டியலில் இவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.புத்தளத்தில் இடம்பெயர்ந்தோர் மத்தியில் பணியாற்றி வரும் ஜன்சிலா மஜீட் என்பவரே இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டவராவார் Read the rest of this entry →

11

03 2010

ஊடகம் இனியும் பூடகமில்லை! எஸ்.எம்.எம். பஷீர் ( பகுதி இரண்டு)

B.B.C Tamil
2004ம் ஆண்டு புது வருடப்பிறப்பினையொட்டி அம்மாத முதல் வார இலண்டன் புலிச்சார்பு பத்திரிகை ஒன்றில் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிபரப்பாளராக பணியாற்றி, அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்தபின்னர் இங்கிலாந்தில் இன்றுவரை பீ. பீ சியின் தமிழோசையில் பகுதிநேர அல்லது ஓய்வு நேர மாற்று அறிவிப்பாளராக பணியாற்றும் சட்டத்தரணியும், சொலிசிடோருமான விமல் சொக்கநாதன் பிரபாகரனை எவ்வாறு வாழ்த்தினார் என்பதை பார்த்தால் புரியும் இவரெல்லாம் எப்படி நடுநிலை ஊடகவியலாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது ஊடக தர்மத்தின் குறைந்த பட்ச நியமங்களை கடைப்பிடிக்க இலாயக்கற்றவர்கள் என்பது Read the rest of this entry →

11

03 2010

எதிர்க்கட்சிகளை சார்ந்திருப்பது வன்னி மக்களுக்கு விமோசனம் தராது எம். ஏ. சம்சுல் அமான் மருதமுனை

Vanni 12Vanni 12 4
ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பதினான்காவது பாராளு மன்றத்திற்கான தேர்தலில் இம்முறை வன்னித் தேர்தல் மாவட் டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக பல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், மற்றும் பல சுயேச்சை அணிகளும் களத்தில் குதித்துள்ளன.இத் தேர்தலில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் இடம் பெற்ற யுத்த காலத்தோடு ஒப்பிடுகையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழக் கூடிய வாய்ப்புக்கள் ஏராளம் Read the rest of this entry →

11

03 2010

தீர்வுக்கான கொள்கையை முன்வையுங்கள் முன்னாள் புலிக்கூட்டமைப்பினருக்கு வேண்டுகோள்

Tamil EezhamSampanthan-and-Sivajilingam
இலங்கையின் உள்விவகாரத்தில் சில உலக நாடுகள் தலையிடுவதற்கு அரசாங்க தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துக்காக ஆணை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தெளிவான ஆணையே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு என்று கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தன் அண்மையில் கூறியிருக்கின்றார் Read the rest of this entry →

11

03 2010

கிழக்கில் மு. கா ஆதரவாளர் விரக்தி தலைமைத்துவ வழிகாட்டலின்றி தவிப்பு

Sri Lanka MuslimRanil
பொதுத் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரம் மிகவும் மந்த கதியில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருவதனால் இம்மாகாணத்தில் உள்ள கட்சி ஆதரவாளர்கள் மிகவும் விரக்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர். இம்மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள கட்சி ஆதரவாளர்கள் பலர் உரிய வழிகாட்டல் தலைமைத்துவம் இன்றி காணப்படுவதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பெரும் எண்ணிக்கையில் இணைந்து கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry →

11

03 2010

2/3 பெரும்பான்மை பலத்துடன் அரசியல் யாப்பில் பல மாற்றங்கள்

Parliament of Sri Lanka
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தலாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையும். மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப்பெற்று அரசியல் யாப்பில் உள்ள பல விடயங்களை அரசாங்கம் மாற்ற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். Read the rest of this entry →

11

03 2010

திருக்கேதீச்சர சிவராத்திரி விழாவில் இந்திய கலைஞர்கள் வருகை

Thiruketheeswaram TempleThiruketheeswaram Temple 1
எதிர்வரும் 13ம் திகதி சனிக்கிழமை திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு அம்சமாக இந்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதற்கான அனுசரணையை வழங்கியிருக்கிறது Read the rest of this entry →

11

03 2010

அன்பார்ந்த புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் உறவுகளே!

T,M.V.P
எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 08ம் திகதி இடம்பெற உள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாம் தனித்து களமிறங்கியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் பல பாகங்களிலும் எமது கட்சி இத்தேர்தலின் ஊடாக தன்னை விரிவு படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய கால இடைவெளிக்குள்ளேயே மக்களின் இயல்பு வாழ்வையும் ஜனநாயகச் சூழலையும் மீளக்கட்டியமைப்பதில் நாம் வகித்த பங்கு அளப்பரியது என்பது உலகு அறிந்த உண்மையாகும். இதற்கு எமது கட்சியும் கட்சி உறுப்பினர்களும் தலைமைப்பீடமும் கொண்டிருந்த ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியும் அர்ப்பணிப்புகளுமே அடிப்படைக் காரணங்களாகும் Read the rest of this entry →

10

03 2010