80 வயது ஜப்பான் முதியவர் எவரெஸ்டில் ஏறி சாதனை

Jusire
எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறிய வயதானவர் என்ற சாதனையை ஜப்பானின் யூசிரே மியூரா படைத்துள்ளார்.கடல் மட்டத்திலிருந்து 29 ஆயிரத்து 28 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை இவர் நேற்று காலை 8.30 மணியளவில் அடைந்தார். நான்கு முறை இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்த முதியவர் 60 ஆண்டுகளுக்கு முன் எட்மன்ட் ஹிலாரி ஏறிய அதே பாதையில் சென்று இந்த சாதனையை செய்துள்ளார். இவருடன் மகன், 3 ஜப்பானியர்கள், 6 நேபாள மலையேற்ற வீரர்களும் சென்றனர் Read the rest of this entry →

24

05 2013

மதங்களுக்கிடையிலான சகவாழ்வை சீர்குலைக்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிஐக்கியத்தை சீரழிக்க இடமளிக்க முடியாது; சகல மதங்களுக்கும் நாட்டில் பூரண சுதந்திரம், கண்டியில் ஜனாதிபதி உரை

Vesak
மதங்களுக்கிடையிலான சகவாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.சகல மதங்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கு நாட்டில் பூரண சுதந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மதங்களுக்கிடையிலான சகவாழ்வை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார் Read the rest of this entry →

24

05 2013

பலத்த காற்று, கனமழை; மண்சரிவு, மலையகம், மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் பெருவெள்ளம் பாதிப்பு, 6 பேர் உயிரிழப்பு; 3 பேரை காணவில்லை, 32 தற்காலிக முகாம்களில் சுமார் 4000 பேர் தங்கவைப்பு; பாடசாலைகள் மூடப்பட்டன

Upcountry
மலையகம், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காற்று, கனத்த மழை, பெருவெள்ளத்தினால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காணாமல் போயுள்ளனரென அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று அறிவித்தது.பாதிக்கப்பட்டவர்களுக்கென 32 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. 1099 குடும்பங்களைச் சேர்ந்த 3881 பேர் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்திலேயே கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Read the rest of this entry →

24

05 2013

வடமாகாண சபை தேர்தல் 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாகவே நடத்தப்படும் அரசியலமைப்பு திருத்தங்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவினாலேயே பிரேரிக்க முடியும்

Dalas and Japa
வட மாகாண சபைக்கான தேர்தல் 13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாகவே நட த்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெற்றன. அதன் பிரகாரமே வட மாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது. Read the rest of this entry →

23

05 2013

கள்ளநோட்டு கும்பலுக்கு புலிகளுடன் தொடர்பு: தமிழகத்தில் இருவர் கைது

money--1
தமிழகத்தின் ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரோடு பஸ் நிலையம் அருகில் வீரபத்திர வீதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு 2 பேர் மதுபானமருந்த சென்றனர். பின்னர் அவர்கள் இந்திய ரூ. 500 நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கி மது அருந்தினர்.அவர்கள் மதுக்கடை விற்பனையாளருக்கு கொடுத்த ரூ. 500 நோட்டு கள்ள நோட்டாக இருப்பதைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மது விற்பனையாளர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து 2 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்டவர்கள் கள்ளநோட்டு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது Read the rest of this entry →

23

05 2013

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் இரு முன்னணி வேட்பாளர்கள் தகுதியிழப்பு, வேட்புமனுத் தாக்கல் செய்த 686 பேரில் 8 பேரே தகுதி

Iran  1Iran
ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து இரு முன்னணி நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அக்பர் ஹஷ்மி ரப்சன்ஜானி மற்றும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்தின் நெருங்கிய நண்பரான இஸ்பன்தியர் ரஹிம் மஷாய் ஆகியோரை பாதுகாவலர் சபை தகுதி நீக்கம் செய்திருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 686 பேர் வேட்பமனுத் தாக்கல் செய்த போதும் இறுதிப் பட்டியலில் வெறும் எட்டுப்பேரே வேட்பாளராக தேர்வாகியுள்ளனர். வேட்பாளரைத் தேர்வு செய்யும் பாதுகாவலர் சபையானது ஈரானின் உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா அலி கொமெய்னியின் நம்பிக் கைக்குரிய சபையாகும். இறையியல் மற்றும் சட்ட நிபுணர்களைக் கொண்ட 12 உறுப்பினர்கள் உள்ளடங்கிய இந்தக் குழு தேர்வு செய்திருக்கும் 8 வேட்பாளர்களும் கடும்போக்கு பழைமை வாத கொள்கையுடையவர்கள் என்றும் ஈரானின் ஆளும் மதத்தலைவர்களுடன் தொடர்புபட்ட வர்கள் என்றும் கருதப்படுகின்றனர். Read the rest of this entry →

23

05 2013

நாட்டு மக்களின் அறிவுக் கண்களை திறந்தவர் சி . டபிள்யு . டபிள்யு. கன்னங்கர

C.W.W Kannankara
இலங்கையில் சர்வஜன வாக்குரிமை மூலம் முதன் முதலில் தெரிவுசெய்யப்பட்ட சட்டப் பேரவையில் அமைச்சர்கள் சிலர் இருந்தார்கள். சட்டப் பேரவையின் கல்விக்கான நிறைவேற்றுக் குழுவில் திரு. சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 1931ம் ஆண்டில் இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் என்ற உயர் பதவியை வகித்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது சட்டசபை அங்கத்தவர்கள் கோட், சூட், சர்வாணி அணிந்திருந்த போதிலும் சி.டபிள்யு. டபிள்யு. கன்னங்கர முதன் முதலில் தேசிய உடையில் கலந்து கொண்டார் Read the rest of this entry →

22

05 2013

வேலைநிறுத்தம் படுதோல்வி, சூழ்ச்சிக்காரரை தோற்கடித்த அரச, தனியார் துறையினருக்கு அரசாங்கம் நன்றி தெரிவிப்பு

Strike  2Strike  3
எதிர்க்கட்சிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட பொது வேலை நிறுத்தம் படுதோல்வி அடைந்துள் ளது. இதேவேளை சூழ்ச்சிக்காரரை தோற்கடித்த அரச, தனியார் துறையினருக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.எதிர்க் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வழமையை விடவும் அதிக ஊழியர்கள் நேற்று கடமைக்குச் சமுகமளித்திருந்தனர். எல்லா அரச, தனியார் நிறுவனங்களும் வழமை போன்று இயங்கின.எதிர்க் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் பொதுமக்களும் வழமை போன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நேற்று சேவைகளைப் பெற்றுக் கொண்டனர் Read the rest of this entry →

22

05 2013

ஜப்பானில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேரை கொன்றொழித்த பயங்கர யுத்த ஆயுதம் அணுகுண்டு கதிர்வீச்சு பாதிப்புகள் இன்னுமே தொடருகின்றன

Hirosima
அணுகுண்டு அணுக்கரு பிளவு முறையிலோ அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெறும் வெடிப்பாயுதமாகும். ஏனைய வெடிமருந்துகளை ஒப்பிட்டு நோக்கும் போது அணுகுண்டின் ஆற்றல் பல ஆயிரம் மடங்கு பெரிது. ஒரு அணு குண்டு பாரிய நகரமொன்றையே நாசமாகக்கூடியது. முதன் முறையாக அணு ஆயுதம் அமெரிக்காவில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சியாலும், இரண்டாம் உலகப் போரின் போது இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டது. Read the rest of this entry →

21

05 2013

யுனெஸ்கோ உண்மையை அறியும் குழுவின் ஜெரூசல விஜயம் இஸ்ரேலால் ரத்து

Al Aksa
ஜெரூசலத்தில் ஐ. நா. மரபுரிமை அமைப்பான யுனெஸ்கோ மேற்கொள்ளவிருந்த விசாரணையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது. இந்த விடயத்தை பலஸ்தீனம் அரசியலாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் உண்மை அறியும் குழு ஜெரூசலத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த தினத்திலேயே இஸ்ரேல் வெளியிறவு அமைச்சு அவர்களின் விசாரணையை நேற்று ரத்துச் செய்தது.
பலஸ்தீனர்கள் புரிந்துணர்வை மதித்து செயற்படுவதில்லை. இந்த விஜயம் ஒரு நிபுணத்துவ ரீதியானது ஆனால் அவர்கள் இந்த விடயத்தை அரசியல் கோணத்தில் அணுகி தூதுக் குழுவின் நிபுணத்துவ செயற்பாடுகளை மாற்றப் பார்க்கிறார்கள்” என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு நேற்று விடுத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது Read the rest of this entry →

21

05 2013

65க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அரசுக்கு ஆதரவு, ஐ.தே.க., ஜே.வி.பி. புலம்பெயர் அமைப்புக்கள் அரசுக்கு எதிராக கூட்டுச் சதி செய்வதாக தொழிற்சங்கங்கள் கண்டனம் வேலைநிறுத்தம் வெற்றிபெறாது

Strike  1
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி நோக்குடன் எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லையென 65 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.வேலை நிறுத்தத்துக்கான அழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 65 சங்கங்கள் நிராகரித்துள்ளதோடு மின்கட்டணத்தைச் சாட்டாகவைத்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் சதியென மேற்படி ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் நேற்று அறிவித்தது.யார் எத்தகைய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்த போதிலும் நாடுமுழுவதும் இன்று வழமை போலவே பஸ், ரயில், துறைமுகம், தபால், நீர்ப்பாசனம், எரிபொருள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் சீராக முன்னெடுக்கப்படவுள்ளமையினால் திட்டமிடப்பட்டுள்ள சதி முயற்சி புஸ்வாணமாகி விடுமென ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்தது Read the rest of this entry →

21

05 2013

சிரியாவுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்கள் அனுப்பிவைப்பு, வெளிநாட்டு தலையீட்டின்போது பயன்படுத்த வாய்ப்பு

Rusia Wopen
ரஷ்யா சிரியாவுக்கு அதி நவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா மீதான எதிர்கால வெளிநாட்டு தலையீட்டின்போது பயன்படுத்தவே இந்த ஏவுகணைகள் அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.எனினும் ரஷ்ய விநியோகஸ்தர்கள் சர்வதேச சட்டங்கள் எதனையும் மீறி செயற்படவில்லை என தற்போதைய தகவலை உறுதி செய்யும் முன்னரே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் Read the rest of this entry →

18

05 2013

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஷிராணி சாட்சியம்

Sirani
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்று (17) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைகள் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.தாம் உழைக்கும் வருமானத்தை விடவும் கூடுதலான சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் அதுபற்றிய உரியவாறு தகவல்களை வழங்காமை என்பன பற்றி கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிடம் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் சுமார் மூன்றரை மணித்தியாலத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது Read the rest of this entry →

18

05 2013

பயங்கரவாதம் பூண்டோடு நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டமை இலங்கையரின் பாக்கியம்

D.M.Jajerathna
ஒருபோதும் தோற்கடிக்க முடியாதெனக் கூறப்பட்ட பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டமையானது இலங்கையர்களான நாம் பெற்றுக்கொண்ட ஒருபாக்கியமாகும். ஒரு சிலர் தமது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்தத் தாய்நாட்டை ஆயுதப் போராட்டத்தின் மூலம் கூறுபோடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் அந்தப் பயங்கரவாதிகளின் ஆயுத பலத்தினைத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தைரியமிக்க தலைமைத்துவத்தினால் முடிந்தது என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ரணவிரு ஞாபகார்த்த தின ஆசிச்செய்தியிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது Read the rest of this entry →

18

05 2013

‘உயிர்வாழ வேண்டுமானால் வெளியேறிவிடுங்கள்’1948 நக்பா தினத்தில் வெளியேற்றப்பட்ட பெண் அனுபவத்தை நினைவுகூருகிறார்

Nagpa
1948 நக்பா அல்லது பேரழிவு தினத்தில் இஸ்ரேலியர்களால் வெளியேற்றப்பட்ட கொடூர அனுபவத்தை 80 வயதான பலஸ்தீன பெண் நினைவுகூர்ந்துள்ளார். 65 ஆவது நக்பா தினம் நேற்று முன்தினம் பலஸ்தீன் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.இதில் 1948 ஆம் ஆண்டு பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டபோது மிப்லா அல் கவல்தாவுக்கு வயது 15 ஆக இருந்தது. காசாவிலிருந்து வட கிழக்காக அமைந்திருக்கும் அல் கஸ்டினா என்ற கிராமத்திலேயே இவர் வசித்து வந்துள்ளார். சிறு வயதிலேயே தந்தையை இழந்துள்ளார். சிறு வயதில் தான் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் விபரித்துள்ளார் Read the rest of this entry →

17

05 2013