சர்வதேச ரீதியில் வலுப்பெறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்


கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட கிழக்கின் தலைமைத்துவத்தைக் கொண்ட முதலாவது கட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போது கிழக்கு மாகாண சபையையும் கிழக்கு மாகாணத்தின் பல உள்ளுராட்சி சபைகளையும் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சர்வதேச ரீதியிலும் தம் இருப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன Read the rest of this entry →

08

02 2012

ஜனாதிபதியுடன் பேசினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். இரத்தினபுரியில் இந்திய ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி


வெளிநாட்டு அழுத்தங்களால் எதுவும் நடக்காது, கச்சதீவை இந்தியா திரும்ப பெற முடியாது மலையக மக்கள் மீது இந்தியாவின் அக்கறை அவசியம் இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அது எந்த வகையிலும் சாத்தியப்படவும் மாட்டாது. இன்றைய நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இலங்கையிலுள்ள பிரச்சினைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது”இந்திய ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry →

08

02 2012

அவுஸ்திரேலியாவில் சறுக்கி விழுந்து அமைச்சர் கெஹலியவுக்கு சத்திர சிகிச்சை


அவுஸ்திரேலியாவின் ‘மெல்போர்ன்’ நகரில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல திடீர் விபத்துக்கு உள்ளானதால் அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையொன்றில் இரு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அமைச்சர் ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல இலங்கை கிரிக்கெட்டின் ஏ அணியில் விளையாடுகின்றார். அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்குச் சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர் ரம்புக்வெல்ல கடந்த 31ம் திகதி அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானார். Read the rest of this entry →

08

02 2012

ஈரான் விடயத்தில் அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருங்கி செயற்படுகிறது ஒபாமா அறிவிப்பு


ஈரான் அணு ஆயுத சக்தியாக உருவெடுப்பதைத்தடுப்பதற்கு அமெரிக்க அரசு இஸ்ரேலுடன் நெருங்கிச் செயற்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.எனினும் ஈரான் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இஸ்ரேல் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தாம் நம்புவதாக ஒபாமா கூறியுள்ளார். என். பி. சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry →

07

02 2012

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று நாட்டை பிளவுபடுத்த முடியாது


அம்பாறை மாவட்ட சுதந்திர தின நிகழ்வு அம்பாறை அரச அதிபர் நீல் டி அல்விஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா கலந்துகொண்டார். மற்றும் ஏனைய அம்பாறை மாவட்ட பொலிசார் உட்பட முப்படைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. Read the rest of this entry →

07

02 2012

பேச்சுவார்த்தையை குழப்புவதால் மக்களுக்கு நன்மை ஏதும் இல்லை சாவகச்சேரியில் ஜனாதிபதி


வெளிநாடுகளிலுள்ள யாழ். புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு புரிந்துணர்வு ஏற்படுத்த ஊடகப் பங்களிப்பு அவசியம். தீர்வுகாண முடியாத விடயங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல
பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு காணக்கூடிய விடயங்களை விடுத்து தீர்வு காண முடியாத விடயங்களை முன்வைத்து பேச்சை குழப்புவதால் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நேற்றுத் தெரிவித்தார் Read the rest of this entry →

07

02 2012

அத்தியாவசிய தேவைகளுக்காகவே வடக்கு கிழக்கில் இராணுவம் இராணுவ மயப்படுத்தப்படுவதாக கூறும் செய்தி பொய்


வடமாகாணத்தை அரசாங்கம் இராணுவ மயமாக்குகின்றது என்ற குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய தேவைகளுக்காகவே நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இதேபோன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இந்தியாவில் வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான ‘டெக்கான் குரெனிக்கல’ என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனை குறிப்பிட்டார். Read the rest of this entry →

07

02 2012

மனிதனின் நினைவாற்றல்


ஒரு மனிதன் அரைமணி நேரத்தில் தான் பெற்ற விவரங்களில் 40 சதவீதத்தை மறந்துவிடுகிறான் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. மறுநாள் அவன் 34 சதவீதத்தையே நினைவில் கொள்கிறான். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவனால் 25 சதவீதத்தை நினைவில் தக்க வைக்க முடிகிறது. ஆரம்ப நாட்களுக்குப் பின் நினைவு தீவிரமாக வீழ்ச்சியடைந்து கிடைமட்டமாக ஓடுகிறது.மீண்டும் மீண்டும் கூறுதல் அல்லது படித்தலே நினைவில் நிறுத்துதலின் அடிப்படை. ஒரு விடயத்தைக் கற்ற பிறகு பின்னர் அதை 15 – 20 நிமிடங்களுக்குப் பின்பும் 8 – 9 மணி நேரத்திலும், 24 மணிக்குப் பின்பும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம். படுக்கைக்குச் செல்வதற்கு 15 – 20 நிமிடங்களுக்கு முன்னரும், காலை படுக்கையை விட்டு எழுந்தவுடனும் ஒருமுறை நினைவு படுத்திப் பார்ப்பது பயனளிக்கும். Read the rest of this entry →

06

02 2012

உலகின் அதிசயம்மிக்க மரம்


டபல் கொக்கனட் (இரட்டை தென்னை) எனப்படும் இந்த தேங்காய்களை ஒத்த காய்களைகொண்ட மரம் இலங்கையில் சுமார் 162 வருடங்கள் வயதை கொண்டது.உலகில் மிகவும் அரிதாக காணப்படும் இந்த வகை மரம் சீசெல்ஸ் என்ற தீவில் மட்டுமே காணப்படுகின்றது.இதன் விதை தான் உலகில் அதிக பாரம் கூடிய விதையாக உள்ளது இது 10 முதல் 20 கிலோ கிராம் நிறையுடையது. இதை பார்வையிட வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் வருகின்றனர் Read the rest of this entry →

06

02 2012

ஏகாதிபத்தியங்களின் அழுத்தங்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் சர்வதேசத்தின் தாளத்துக்கு ஆடுகின்ற பொம்மை அரசு இதுவல்ல


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாடுகளின் தாளத்திற்கு ஆடுகின்ற ஓர் பொம்மை அல்ல என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டுக்கோ, அமைப்புக்கோ ஒரு போதும் அடிமையாகாது எனவும் அவர் கூறினார் Read the rest of this entry →

06

02 2012

கிராமங்களை அபிவிருத்தி செய்து நகரங்களுடன் இணைப்பதே நோக்கம். தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி


தேசத்துக்கு மகுடம் அடுத்த கண்காட்சி கிழக்கு மாகாணத்தில் நகர்களுக்குள்ள வசதிகள் அனைத்தும் கிராமங்களுக்கும் வழங்கி இரண்டையும் நவீனமயப்படுத்தி ஒன்றிணைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் ஒயாமடுவயில் நேற்று முன்தினம் ‘தேசத்துக்கு மகுடம்’ அபிவிருத்திக் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார் Read the rest of this entry →

06

02 2012

சிரியா தீர்வுத் திட்டத்தை வீட்டோ’ மூலம் நிராகரித்தது சீனா, ரஷ்யா மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் கடும் அதிருப்தி


சிரிய அரசியல் நெருக்கடிக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை நிரந்தர அங்கத்துவ நாடுகளான ரஷ்யா, சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தன.அரபு லீக் அமைப்பு மற்றும் மேற்கு நாடுகள் கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தையே ரஷ்யா, சீனா நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த தீர்வுத் திட்டம் மேலும் மேம்படுத்தப்படவேண்டும் என ரஷ்யா, சீனா குறிப்பிட்டன. Read the rest of this entry →

06

02 2012

இலங்கை 64 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மட்டுநகரில் இடம்பெற்ற நிகழ்வுகள்


இலங்கை 64 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதாணமும், மரம் நாட்டு நிகழ்வும் மண்முனைப்பற்று இளைஞ்ர் சேவை உத்தியோகத்தர் திருமதி பிரசாந்தி தலைமையில் புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது இச் சிரமதானப்பணியிலும் மரம்நடுகை விழாவிலும கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இளைஞர் சேவை உத்தியோகத்தர் நடேசகுமார், பாடசாலை அதிபர், இளைஞ்ர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

05

02 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்–ஆக்கம்: சி.தணிகசீலன்.


மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்க்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவாக இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்ப்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும் இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் ‘”பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் சொல்ல இதனை வரைகிறேன் Read the rest of this entry →

05

02 2012

அனைத்து தரப்பினரையும் உள்வாங்கிய இணக்கப்பாடே காலத்தின் தேவை


30 வருட கொடூர யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைபெற யுத்தத்தை தோற்றுவித்த அடிப்படைக் காரணிகள் களையப்படுதல் வேண்டும். அவ்வடிப்படைக் காரணிகள் களையப்படுவதிலும் பார்க்க அக்காரணிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புத் தரவல்ல சிகிச்சையாகவே தீர்வுத் திட்டம் பேசப்படுகின்றது. சிகிச்சைகள் பக்க விளைவுகளை தரக்கூடியவை. உடம்பின் எந்தப் பாகத்தின் நோயைத் தீர்க்க சிகிச்சை நாடப்படுகின்றதோ அச்சிகிச்சை உடம்பின் மற்றொரு பாகத்திற்கு பக்க விளைவுத்தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை வைத்தியர்களுக்கு இருக்கின்றது. எனவே ‘அரசாங்கம்’ என்ற வைத்தியர் ‘தமிழ் மக்கள்’ என்ற உடற்பாகத்தின் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கான சிகிச்சையைச் செய்ய விழைகின்ற பொழுது இலங்கை மக்கள் என்ற உடம்பின் அடுத்த பாகங்களான ஏனைய சமூகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. Read the rest of this entry →

05

02 2012