உலக நாடுகளின் முதலீடுகளை கவரும் பிரபல கேந்திர சந்தையாக இலங்கை ரஷ்யாவில் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட விழாவில் ஜனாதிபதி

M.R 3
வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது. அது மட்டுமன்றி சர்வதேசரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததையடுத்து உரையாற்றியபோது தெரிவித்தார். Read the rest of this entry →

08

02 2010

சரத் பொன்சேகா மேற்கொண்ட சதி தொடர்பான விசாரணைகளை நடத்த அரசு திட்டம்

Fonseka
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை கொலை செய்வதற்கான சதித் திட்டம் நடந்தபோது, ஓட்டலில் சரத் பொன்சேகா உடன் இருந்த பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் கடந்த மாதம் 27ம் திகதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்தன. தேர்தல் முடிவுகளில் பொன்சேகா பின்தங்கியிருந்தார். அப்போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சரத் பொன்சேகா தனது ஆதரவாளர்களுடன் தங்கியிருந்தார். எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலரும் அங்கு இருந்தனர். அந்த ஓட்டலின் 70 அறைகளில், சரத் பொன்சேகா ஆதரவாளர்கள் தங்கியிருந்தனர் Read the rest of this entry →

08

02 2010

வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு

ComputerPrabakaran Eezham
வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சகம் நேற்று தெரிவித்தது.இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார். Read the rest of this entry →

08

02 2010

சுதந்திரக் கட்சி வேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சை இன்றும் நாளையும் ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் வெற்றிலை சின்னத்தில் களமிறங்க முடிவு

upfa_logo
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ள தாகவும் கூட்டுக்கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். Read the rest of this entry →

08

02 2010

உலக வர்த்தகமைய தாக்குதலுக்கு முன்னதாகவே சதாம் உசேனை அகற்ற பிரிட்டன் ரகசிய திட்டம் புதிய தகவலால் பரபரப்பு, ஏகாதிபத்தியங்களின் இரட்டைவேடம் அம்பலம்.

Tony BlairIrak 21
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில், அந்த கட்டடம் தரை மட்டமாகியது. இதைத் தொடர்ந்து, ஈராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் தாக்குதல் நடத்தின. தலைமறைவான அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை, அமெரிக்க ராணுவம் கைது செய்தது. இதையடுத்து, அவர் மீது ஈராக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தூக்கில் போடப்பட்டார் Read the rest of this entry →

08

02 2010

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து ரஷ்ய நட்புறவு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவம்

MR doctorPresident in Rusiya
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். மொஸ்கோ வினுகோஆ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் Read the rest of this entry →

07

02 2010

முஸ்லிம்களுடைய மரியாதைக்குரிய பெருந்தலைவர் ஜனாதிபதி மஹிந்த சதிகாரர்களின் முயற்சிகளுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டியுள்ளனர் – அலவி மெளலானா

AlaviSarath-006 and
தமக்குத்தான் முஸ்லிம்களது ஆதரவு உண்டு என்று பச்சைப் பொய்களைச் சோடித்து உலகம் அறியச் செய்து அதன் மூலம் கொள்ளை, கொள்ளையாக வெளிநாட்டு பணத்தைப் பெற்று இந்நாட்டு முஸ்லிம்களை ஏலத்தில் விற்று வயிறு வளர்க்க முற்படுகின்ற சுயநல சதிகாரர்களின் முயற்சிகளை இந்நாட்டு முஸ்லிம்கள் தவிடுபொடியாக்கிவிட்டனரென கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் அமைப்பாளரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தெரிவித்துள்ளார் Read the rest of this entry →

07

02 2010

பொன்சேகா ஏன் தோல்வியைச் சந்தித்தார்? .—சமூகஜோதி ரபீக்

PuthinappalakaiSampanthan and sarath
அரசியல் ஒரு சாக்கடை என்று அடிக்கடி சிலர் கூறினாலும் அயோக்கியனின் கடைசிப்புகலிடம் அரசியல் என்று ஓர் அறிஞன் குறிப்பிட்டிருந்தாலும் ஒரு நாட்டினுடைய நிர்வாக அதிகாரம் அரசியல்வாதிகளின் கைகளில்தான் தங்கியிருக்கிறது என்பதை அறிவுள்ள எவராலும் ஆட்சேபிக்க முடியாது.மக்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, உடன்பட்டாலும் சரி முரண்பட்டாலும் சரி அரசியல் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டுத்தான் அனைவரும் வாழ வேண்டும் என்பது தவிர்க்கமுடியாதது மட்டுமல்ல தடுக்கவும் முடியாத சமாச்சாரம்தான் Read the rest of this entry →

07

02 2010

தீர்வற்ற சூன்ய நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது தலைமைப் பண்பாகாது —சுரேஷ் நாகேந்திரா

North Distikt
தமிழ் அரசுவழிச் சமூகத்தில் தேசிய இனப்பிரச்சினை முக்கிய இடம் வகிக்கின்றது. காலங்காலமாகத் தமிழ் மக்கள் கூட்டாக முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது தேசிய இனப்பிரச்சினையே. தமிழ் மக்களின் அரசியல் சிந்தனை இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டதாக இருப்பதால் இப்பிரச்சினை பற்றிப் பேசும் அரசியல் தலைவர்களே தமிழ் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றனர். இவ்வாறு நிலைத்து நிற்பவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்கு இனப் பிரச்சினை அத்தியாவசியமானது எனக் கருதுவதனாலோ என்னவோ பிரச்சினையின் தீர்வுக்காக ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை. இத்தலைவர்களின் தவறுகளே பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதற்குப் பிரதான காரணம் எனக் கூறினால் அது தவறாகாது Read the rest of this entry →

07

02 2010

தமிழர்களின் வாக்குகளுக்குள் மறைந்துகொள்ள முயற்சிக்கிறார் ரவூப் ஹக்கீம் அமைச்சர் அதாவுல்லாவுடன் ஒரு நேர்காணல் —பி. வீரசிங்கம்

AthauillaHakeem_Prabha
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களின் வாக்குகளில் மறைவதற்கு முனைகிறார். அவர் கூறுவதில் எதுவித உண்மையுமில்லை. பெரும்பான்மையான முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களித்துள்ளார்கள் என தேசிய நீர் வழங்கல் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். Read the rest of this entry →

07

02 2010

வளர்ச்சி பாதைக்கு திரும்புகிறது யாழ்ப்பாணம் –இரா.மலர்அமுதன். (தினமலர்)

Jaffna 07.02Jaffna MunicipaltyJaffna3 Library
இலங்கை உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் திணறிய நிலை மாறியுள்ளது.இலங்கையில் உள்நாட்டுப் போர் 83ம் ஆண்டு துவங்கியது. யாழ்ப்பாண நகரில் துவங்கி, தொடர்ந்து தமிழர்கள் வசிக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களுக்கு பரவியது. போர் தீவிரத்தால் யாழ்ப்பாணம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இலங்கை ராணுவம் நடத்திய கடும் தாக்குதலுக்குப்பின், 1995ம் ஆண்டு யாழ்ப்பாண நிர்வாகம் அரசு கட்டுப்பாட்டில் வந்தது Read the rest of this entry →

07

02 2010

மக்கள் மத்தியிலும் ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும்

Ranil 30Ranil_watch Piraba
நிலங்களை ஐக்கியப்படுத்திய தன்னிடம் மக்களின் இதயங்களை ஐக்கியப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அப்பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றப் போவதாகவும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். நாட்டின் மாகாணங்களையே நிலங்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். Read the rest of this entry →

06

02 2010

4 வருடத்துக்குள் அபிவிருத்தியில் முன்னேற்றமிக்க நாடாக இலங்கையை உருவாக்க முடிந்துள்ளது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை

Thesam
நான்கு வருட குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த நாடாக இலங்கையை உலகுக்குக் காட்ட முடிந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பல்வேறு சவால்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டைப் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி வருடத்திற்கு வருடம் நாடு அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்து வருவதுடன் பல வெற்றிகளையும் உரித்தாக்கி வருவதாகவும் தெரிவித்தார் Read the rest of this entry →

06

02 2010

அர்ப்பணிப்பு, ஊழலற்ற சேவை மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் கண்டி சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி உரை

KandyLAT_SRI_LANKA_INDEPE_29657f
அரசியல் தலைவர்கள் மக்களை தவறாக பயன்படுத்தக் கூடாது
தாய்நாட்டையும் மக்களையும் குறுகிய சிந்தனையுடன் நோக்க வேண்டாம்
தண்டனை, இராணுவ சட்டதிட்டங்கள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது
அரசியல் பலத்தைப் பாதுகாக்க எந்தச்சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுத்ததில்லை

தண்டனை, இம்சை, இராணுவ சட்ட திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகள், ஊழல் மோசடியற்ற சேவை மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தமது அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சந்தர்ப்பத்திலும் எத்த கைய தீர்மானத்தையும் மேற்கொண்டதில்லையென தெரிவித்த ஜனாதிபதி தாய்நாட்டின் ஒரு அங்குல நிலத்தையாவது காட்டிக்கொடுக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார் Read the rest of this entry →

05

02 2010

பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் (04.02.2010) அரிய வாய்ப்பு எமக்கு கிட்டியது.

Sivageethakumarathurai
இன்று இலங்கையின் 62வது சுதந்திர தினம் கொண்டாட்டம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஜோர்ச் பிள்ளை தலைமையில் மாநகர வளாகத்தில் நடைபெற்ற சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றும்போது, பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திரதினத்தை கொண்டாடும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. எமது இலங்கை திருநாட்டை பொறுத்தவரையில் இன்று கொண்டாடப்படுகின்ற 62வது சுதந்திரதின கொண்டாட்டம் அனைத்து தமிழ் மக்களும் அனுஷ்டிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலேயே இச்சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. Read the rest of this entry →

05

02 2010